குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருப்பூர், ஜன. 29:  தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை பணி அமர்த்தும் நிறுவனங்கள் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது குறித்து தொழிலாளர் சம்மதத்துடன், தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்நிலையில் குடியரசு தினத்தன்று திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் மலர்கொடி தலைமையிலான அதிகாரிகள் திருப்பூர், தாராபுரம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், முறைப்படி தகவல் தெரிவிக்காமலும் இருந்த 36 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: