தொடர் புகார் எதிரொலி போக்குவரத்து உதவி கமிஷனர் பணியிடமாற்றம்

திருப்பூர், ஜன. 29:  திருப்பூர்  மாநகரம் கேவிஆர்  நகர், கொங்கு நகர் ஆகிய 2 சரகங்களுக்கும் போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்தவர் கொடிசெல்வன். இவர் மீது  பல்வேறு புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மாநகருக்குள் வருவதற்கு லாரி உரிமையாளர்கள் உதவி கமிஷனர் கொடிசெல்வனுக்கு பணம் கொடுப்பதாக கூறும் வீடியோ ஒன்று வைரலானது.  தொடர் புகார் எதிரொலியாக கடந்த 26ம் தேதி டிஜிபி  அலுவலகத்திலிருந்து அவருக்கு பணி இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. அதில் அவர்  சென்னை, தாம்பரம் பகுதியில் உள்ள அதிவிரைவு படை  உதவி கமிஷனராக  பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: