திருப்பூர், ஜன. 29: ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி ஏஐடியுசி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மண்டல துணை தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் சண்முகம், மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.