ஒரேநாளில் கொரோனாவால் 665 பேர் பாதிப்பு; 4 பேர் பலி

திருவள்ளூர், ஜன.29:  மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 33 ஆயிரத்து 220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் 6493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1907 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: