புழல், ஜன.29: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கிளை பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் பாடியநல்லூர், நல்லூர், சோழவரம், மொண்டியம்மன் நகர், காந்திநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 39 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், வங்கியின் வேளாண் வணிக பிரிவின் துணை பொது மேலாளர் நாகேஸ்வரராவ் தலைமை தாங்கினார்.