மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவி

புழல், ஜன.29: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கிளை பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் பாடியநல்லூர், நல்லூர், சோழவரம், மொண்டியம்மன் நகர், காந்திநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 39 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், வங்கியின் வேளாண் வணிக பிரிவின் துணை பொது மேலாளர் நாகேஸ்வரராவ் தலைமை தாங்கினார்.

சென்னை வடக்கு மண்டலத்தின் துணை பொது மேலாளர் சஃபல் திரிபாதி, அம்பத்தூர் மண்டல மேலாளர் ஹரிஹரன், முதன்மை மேலாளர் நாராயணன், பாடியநல்லூர் கிளை மேலாளர் நிஷா ஆகியோர் கலந்துகொண்டு, 39 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹2 கோடி 37 லட்சத்திற்கான காசோலை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த தலைவி சாந்தி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: