சிங்கம்புணரி: குடியரசு தினத்தை முன்னிட்டு சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் திவ்யாபிரபு கொடியேற்றினார். பிடிஓக்கள் லட்சுமண ராஜூ, பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மேலாளர் அருட்பிரகாசம், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி சதத்துநிசா தேசிய கொடியேற்றினார். தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜான் முகமது, மல்லாக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயாராதாகிருஷ்ணன், அரளிக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி காளிதாஸ், ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், மதுராபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, முறையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், பிரான்மலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன் கொடியேற்றினர்.