திருப்புவனம்: திருப்புவனம் அருகே ரோட்டோரம் கிடந்த முதியவர் உடல் மீட்கப்பட்டது. திருப்புவனம் அருகே இலுப்பகுடியில் ரோட்டோரம் 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடப்பதாக விஏஓ ராஜசேகர் பூவந்தி போலீசில் புகார் செய்தார். பூவந்தி இன்ஸ்பெக்டர் சரிதா பாலு, எஸ்.ஐ ஜெயக்கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.