வாகன விபத்துகள் அதிகரிப்பு: ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

காளையார்கோவில்: காளையார்கோவிலில் ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே போவதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றது.  இருவழிச்சாலையை  ஒருவழிச் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காளையார்கோவிலில் உள்ள மதுரை-தொண்டி நெடுஞ்சாலை 2012ம் ஆண்டு  தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு இருவழிச் சாலையாக உள்ளது. தற்போது காளையார்கோவில் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டே போவதால் இருவழிச் சாலை ஒருவழிச் சாலையாக மாறி வருகின்றது.

மேலும் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து  கல்லல், காரைக்குடி திரும்பும் வளைவு மற்றும் போலீஸ் ஸ்டேசன், பரமக்குடிக்கு திரும்பும் வளைவுகளில்  அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. விபத்துகளை தடுப்பதற்காக காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து சூசையப்பர்பட்டிணம் விளக்கு வரையிலும் உள்ள இருவழிச் சாலையை ஒருவழிச் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் போலீஸ் ஸ்டேசன், பரமக்குடி வளைவு மற்றும் கல்லல், காரைக்குடிக்கு திரும்பும் வளைவுகளில் ரவுண்டானா அமைக்க வேண்டும். காலை மற்றும் இரவு நேரங்களில் டிராபிக் போலீசாரின் மூலம் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: