திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 861-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 854 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 879-ஆக உள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 1037ஆகவே உள்ளது.