வியாபாரத்தில் நஷ்டம் வியாபாரி தற்கொலை

திருச்சி, ஜன. 28: திருச்சி ரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (45). தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். மழை மற்றும் பனி காலத்தால் வியாபாரம் சரிவர இல்லை. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்ட பழனிசாமி கடந்த 21ம் தேதி எலி பேஸ்ட் தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பழனிசாமி இறந்தார். இதுகுறித்து ரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: