செய்யாறு அருகே ஆசைவார்த்தை கூறி உல்லாசம் மாணவியின் கர்ப்பத்தை கலைத்து திருமணம் செய்ய மறுப்பு திருமணமான வாலிபர் போக்சோவில் கைது

செய்யாறு, ஜன.28: செய்யாறு அருகே ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு மாணவியின் கர்ப்பத்தை கலைத்த திருமணமான வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவர் செய்யாறில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் எச்சூர் கிராமத்தை சேர்ந்த திருமணமான சந்தோஷ்குமார்(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அடிக்கடி சந்தித்த நிலையில், சந்தோஷ்குமார் திருமண ஆசைவார்த்தை கூறி, மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்தார்.

இதுகுறித்து மாணவி, சந்தோஷ்குமாரிடம் தெரிவித்து, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ்குமார், நைசாக பேசி மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து, கருவை கலைத்துள்ளார். அதன்பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம். மாணவி பலமுறை வற்புறுத்தியும் சந்தோஷ்குமார் திருமணம் செய்ய தொடர்ந்து மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது தாயிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்ெபக்டர் அருள்மொழி விசாரணை நடத்தினார். இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தார். பின்னர் அவரை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வந்தவாசி கிளை சிறையில் அடைத்தார்.

Related Stories: