தொடர் கஞ்சா விற்ற வழக்கு குண்டாசில் வாலிபர் கைது

கரூர், ஜன.28: கரூர் பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் அரவக்குறிச்சி அருகே புதுசீத்தப்பட்டி காலனியை சேர்ந்த சரவணன் மகன் திவாகர்(25) என்பவர் ஈடுபட்டு வந்ததோடு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்தார். இவரை கரூர் நகர போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வாலிபர் பலமுறை கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அதன்பின் விடுவிக்கப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி., சுந்தரவடிவேல் கஞ்சா வழக்கில் தொடர்புடைய திவாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் பிரபு சங்கருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து கரூர் கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் திவாகரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: