2வது நாளாக குளித்தலை சுங்ககேட் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குளித்தலை, ஜன.28: குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், கரூர் முதல் திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில், குளித்தலை பஸ் நிலைய பகுதிகளிலும் வியாபாரிகள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்ததாக குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் ஆர்டிஓ புஷ்பாதேவியிடம் கோரிக்கை மனுவை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சுங்ககேட் பகுதியில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும், இடையூறாக கடை முன்பு உள்ள மேற்கூரைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் ஆர்டிஓ புஷ்பாதேவி, நகராட்சி ஆணையர் சுப்புராம், டிஎஸ்பி., தர், நகராட்சி பொறியாளர் ராதா ஆகியோர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. தொடர்ந்து குளித்தலை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: