நாகை,ஜன.28: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு கூட்டம் நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். நாகை வட்டச் செயலாளர் அற்புதராஜ்ரூஸ்வெல்ட் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் டேனியல்ஜெயசிங் தொடக்க உரையாற்றினார். சைபர் க்ரைம் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திருக்குமரன், காவலர் முருகதாஸ் ஆகியோர் சைபர் க்ரைம் குற்றம் குறித்தும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினர். இதில் ஏடிஎம் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றின் எண்களை அறிமுகம் இல்லாதவர்களிடம் தெரிவிக்க கூடாது.