நாகை, ஜன.28: நாகை பாப்பாக்கோவில் அருகே ஏறுஞ்சாலை வாய்க்காலில் 50 வயது நிறைந்த ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக நாகை டவுன் ஸ்டேசனுக்கு தகவல் வந்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரேதத்தை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபரின் உடலில் துணிகள் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், இறந்து கிடந்தவரை யாராவது கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.