பொன்பரப்பி அருகே பெண்ணை தாக்கி 2 பவுன் செயின் பறிப்பு

செந்துறை, ஜன.28: பொன்பரப்பி அருகே டூ வீலரில் வந்த பெண்ணை தாக்கி 2 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். அரியலூர் மாவட்டம் மருதூர் கீழப்பட்டியை சேர்ந்தவர் வசந்தி. இவர் நேற்றுமுன்தினம் இரவு செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் உறவினர் வீட்டு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் மருதூர் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்பரப்பி உயர் அழுத்த மின்டவருக்கும், பெட்ரோல் பங்குக்கும் இடையில் பின்னால் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர் வசந்தியை தாக்கி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து சென்றனர்.

இதனால் நிலைகுலைந்த வசந்தி சுதாரித்துக்கொண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுப்பட்ட மர்மநபர்கள் குறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் இரும்புலிக்குறிச்சி பகுதியில் பெண் மருத்துவர் மற்றும் சர்வேயர் ஆகியோர்கள் மீது வழிபறி நோக்கில் ரசயான பொடி தூவியது குறிப்பிடதக்கது. தொடர்ந்து பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் மர்ம நபர்களை காவல்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: