கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் பேருந்து மோதி லாரி டிரைவர் படுகாயம்

புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பில்எல்ஏ ரவுண்டானாவிலிருந்து பால்பண்ணை செல்லும் பிரதான சாலையில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையை சேர்ந்த தனியார் லாரி ஓட்டுனர் குப்புசாமி என்பவர் தனது டூவீலரில் அவ்வழியே வந்தபோது, அன்னவாசலில் இருந்து புதுக்கோட்டை சென்ற தனியார் பேருந்து மோதியதில் காயமடைந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் ரவுண்டானா சாலை மற்றும் பால்பண்ணை சாலையில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து பல முறைகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கு வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும், எந்த நடவடிக்கை எடுக்காததால் விபத்துக்கள் தொடர்கிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: