தஞ்சை பெரியகோயிலில் ரூ.11லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

தஞ்சை ஜன.28: தஞ்சை பெரியகோயிலில் நேற்று 11 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.11லட்சத்து 7ஆயிரத்து 227 கணக்கிடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் பெருவுடையார் சன்னதி, அம்மன் சன்னதி, வராகி சன்னதி, முருகன் சந்நிதி விநாயகர் சன்னதி,நடராஜர் சன்னதி உட்பட 11 இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நேற்று அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராமகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு பக்தர்களால் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்ட பணங்கள் தன்னார்வலர் கொண்டு என்னப்பட்டது இதிலிருந்து 11 லட்சத்து 7ஆயிரத்தி 227 ரூபாய் பெறப்பட்டது.

Related Stories: