ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்ககோரி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைமுன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன.28: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடன் நடத்த வலியுறுத்தி தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும், வரவுக்கும், செலவுக்கும் ஆன இடைப்பட்ட தொகையை மானியமாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ பணிமனை தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் வெங்கடேசன், பணிமனை செயலாளர் பழனிவேல், துணைத்தலைவர் சத்யராஜ் பாரத்ராஜ், தஞ்சை மாவட்ட சிஐடியூ சங்க துணைச் செயலாளர் அன்பு ஆகியோர் பேசினர். சங்க மாநில துணை செயலாளர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Related Stories: