எஸ்பி அலுவலக தனிப்பிரிவு தலைமை காவலருக்கு முதல்வர் விருது

தஞ்சை, ஜன.28: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு தலைமைக்காவலர் அசோக்கிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முதல்வர் விருது மற்றும் சான்றிதழை வழங்கினார். தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா எளிமையாக நடந்தது. இதில் சிறந்த முறையில் பணியாற்றிய காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு முதல்வர் விருது மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை எஸ்.பி., அலுவலக தனிப்பிரிவு தலைமைக்காவலர் அசோக்கிற்கு முதல்வர் விருது மற்றும் சான்றிதழை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். விருதுபெற்ற தலைமைக்காவலர் அசோக்கிற்கு காவல்துறையை சேர்ந்தவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

(காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் துணை மின் நிலைய பகுதிகள்: திருமலைசமுத்திரம், மொன்னையம்பட்டி, வல்லம்புதூர், குருவாடிப்பட்டி, நாட்டாணி, செங்கிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள். கும்பகோணம் அர்பன் மற்றும் ராஜன் தோட்டம் துணை மின் நிலைய பகுதிகள்: கும்பகோணம் மாநகர் முழுவதும் மற்றும் கொரநாட்டு கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி ஆகிய பகுதிகள். கள்ளப்பெரம்பூர் 33 கி.லோ வாட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகள்: கள்ளப்பெரம்பூர், அள்ளுர், அளிசகுடி, அம்மையகரம், கழுமங்கலம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரை சாமந்தம், களிமேடு, பனவெளி, 8 கரம்பை.

Related Stories: