கலெக்டர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய வக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து, தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசித்தார். அதை அரசு அலுவலர்கள் திரும்ப கூறி ஏற்றுகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், பிஆர்ஓ சீனிவாசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: