வீடு புகுந்து பணம் திருட்டு

திருப்புத்தூர்:  திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(53). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு பொன்னமராவதி சந்தைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த ரூ.1 லட்சத்து 10,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: