திருப்பூர்: காங்கயம் அடுத்துள்ள காடையூரை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் கடந்த 04.06.2020 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் காங்கயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கடந்த 2 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த சிறுமிக்கு தற்போது 8 மாத ஆண் குழந்தை உள்ளது. காங்கயம் போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை நேற்று போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.