ஈரோடு: நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று (26ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி.மைதானத்தில் இன்று காலை 8.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் துறையில் 20 ஆண்டுகள் எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் சிறப்பாக பணியாற்றிய 55 போலீசாருக்கு தமிழக முதல்வரின் பதக்கமும், சான்றிதழையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் எஸ்பி சசி மோகன் ஆகியோர் வழங்க உள்ளனர்.