தூத்துக்குடி, ஜன. 26: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் சார்பில் வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2020-21ம் ஆண்டுக்கான நிகர லாபத்தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி ரூ.42,340க்கான காசோலையை சங்கத் தலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்க செயலர் சாவித்ரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.