நெல்லை மாவட்டத்தில் 29ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

நெல்லை, ஜன. 26:  மேலக்கல்லூர், கரிசல்பட்டி, சேரன்மகாதேவி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 29ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர் சங்கரன்திரடு ஆகிய பகுதிகளில் 29ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதேபோல் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, இடையன்குளம், கங்காணங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் 29ம் தேதி மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Related Stories: