பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூர் மாணவர்கள் பதக்கங்கள் குவிப்பு

திருத்துறைப்பூண்டி, ஜன.26: திருவாரூர், நாகை மாவட்ட ஹப்ஹிடோ அசோசியேசன் மற்றும் முத்தூஸ் கராத்தே கோபுடோ தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான 11வது ஹப்ஹிடோ (பாக்ஸிங்) சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் திருவாரூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்டனர். இதில் ஜெய் ராம் 1 தங்கம், 1 வெண்கல பதக்கமும், லட்சுமி நாராயணன் 2 வெள்ளி பதக்கமும், பிரசாந்த் மாதவ் 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை இந்திய தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன் மற்றும் பயிற்சியாளர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Related Stories: