திருவாரூரிலிருந்து குடந்தைக்கு புற்று நோய் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி துவக்கி வைப்பு

திருவாரூர், ஜன.26: திருவாரூரில் இருந்து கும்பகோணம் வரையிலான புற்று நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் ரமேஷ் துவக்கி வைத்தார். உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவது குறித்தும் புகையிலையை தவிர்க்கும் வகையிலும் விழிப்புணர்வு பேரணியானது திருவாரூரைச் சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில் நேற்று நடந்தது. இதனையொட்டி திருவாரூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து கும்பகோணம் வரையிலான சைக்கிள் பேரணியை நகராட்சி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலும், நுகர்வோர் அமைப்பு பொதுச் செயலாளர் ரமேஷ் மற்றும் சேவை சங்க பொறுப்பாளர் கருணாநிதி முன்னிலையில் டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் அமைப்பின் தலைவர் குணசேகரன் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் 40 கி.மீ. சைக்கிள் மூலம் கும்பகோணத்திற்கு சென்றனர்.

Related Stories: