கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு வாலிபர் கைது

இளம்பிள்ளை: இளம்பிள்ளை அடுத்த காடையாம்பட்டி செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் ரூபன்(எ) வரதராஜபெருமாள்(30). இவர், கடந்த 21ம் தேதி இரவு தனக்கு உடல்நிலை சரியில்லை என அதே ஊரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சீனிவாசன் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை நம்பிய அவரிடம் இளம்பிள்ளையில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம் எனக்கூறி துணைக்கு அழைத்துக்கொண்டு டூவீலரில் சென்றுள்ளார். ஆனால், இளம்பிள்ளைக்கு செல்லாமல் காடையாம்பட்டி ஏரி பகுதிக்கு வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான சீனிவாசன் டூவீலரை நிறுத்துமாறு கூறியுள்ளார். அப்போது, ரூபன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சீனிவாசனிடம் இருந்த ₹650 பணம் மற்றும் செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பினார்.

இதுகுறித்து சீனிவாசன் மகுடஞ்சாவடி போலீசில் புகாரளித்தார். புகாரின் பெயரில் எஸ்ஐ பெரியசாமி வழக்கு பதிந்து ரூபனை தேடிவந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரூபனை மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்து, அவரிடமிருந்து டூவீலர், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். தொடர்ந்து, சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories: