ரூ.11.50 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம்: காரிமங்கலம் வாரச் சந்தை செவ்வாய் கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடப்பது வழக்கம். நேற்று நடந்த தேங்காய் சந்தையில் அரசம்பட்டி, பாரூர், காவேரிப்பட்டணம், பண்ணந்தூர், வேலம்பட்டி, விளங்காமுடி, அரசம்பட்டி, புலியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அளவை பொறுத்து ₹6 முதல் ₹13 வரை விற்பனை செய்யப்பட்டது. சுமார் ஒரு லட்சம் தேங்காய்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ₹11.50லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடந்தது. திருமண முகூர்த்த நாட்கள் அதிக அளவில் வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருமணங்கள் எளிமையாக நடப்பதாலும், கோயில் திருவிழாக்கள் இல்லாததால், தேங்காய் விற்பனை மற்றும் விலை குறைந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: