மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அரூர்:  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மரணத்திற்கு நீதிகேட்டு, அரூர் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் காந்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இழப்பீடு ₹25,00,000 வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகளை துறைரீதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் கரூரான், மாநிலக்குழு பொறுப்பாளர் தமிழ்செல்வி, குமார், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: