சாலை பணியை முடிக்க கோரிக்கை

சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோவில் சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சி பி.கே.எஸ்.ஏ ரோட்டில் அம்பேத்கார் சிலையில் இருந்து மருத நாடார் ஊரணி மேடு வரை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தற்பாேது இந்த சாலை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகிறது. இதன் பின் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இந்த சாலையில் கோவில், சர்ச் மற்றும் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆசிரியர்கள், பக்தர்கள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். இதே போல் நகரின் முக்கிய சாலையாக உள்ளதால் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். பொது மக்கள் நலன் கருதி சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: