சீரான குடிநீர் விநியோகம்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பேரூராட்சி 5வது வார்டில் மஞ்சளாறு அணை கிராமம் மற்றும் ராசிமலை கிராமம் உள்ளது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், அடிக்கடி சேதமடைந்து குடிநீர் விநியோகம் பாதித்தது. இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், மேஸ்திரி பால்பாண்டி முன்னிலையில், அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து மஞ்சளாறு அணை கிராமம், ராசிமலை கிராமத்திற்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: