பஸ் வசதி இல்லாத கிராமங்கள்

சிங்கம்புணரி:  சிங்கம்புணரியில் இருந்து பருகப்பட்டி, அணியம்பட்டி, வகுத்தெழுவன்பட்டி, புதுப்பட்டி, செருதப்பட்டி வழியாக கீழவளவிற்கு மினி பேருந்து வசதி இருந்தது. இதற்கு முன்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் சிங்கம்புணரி டவுன் பஸ் காலை மாலை நேரத்தில் செருதபட்டி வரை சென்று திரும்பியது. இந்த சாலையில் உயர்நிலைபள்ளி, நடுநிலை பள்ளி என மூன்று அரசு பள்ளிகள் உள்ளது. கொரோனாவால் பல மாதங்களாக இவ்வூருக்கு மினி பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால், இவ்வழியாக செல்லும் 7 கிராம மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், பள்ளி மாணவ,மாணவிகள் முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Related Stories: