×

விவசாயிகளின் விரோத ஒன்றிய அரசை கண்டித்து நெல்மூட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சை,ஜன.25: விவசாயிகளின் விரோத ஒன்றிய அரசை கண்டித்து நெல்மூட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் அருந்தவபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றி செயலாளர் செந்தில்குமார், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலு , நகர செயலாளர் ராஜாராமன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் முறையால் விவசாயிகள் நெல்லை காலத்தோடு கொள்முதல் நிலையத்தில் போடமுடியமால் சர்வே பிரச்சனையின் காரணமாக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்படுகிறது. உடன் அரசு ஆன்லைன் முறையை ரத்து செய்து காலதாமதமின்றி பழைய நடை முறையிலேயே நெல்லை கொள்முதல் செய்ய கோரி விவசாயிகள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து சங்கு ஊதியும், நெல் மூட்டைக்கு மாலை போட்டும், மணி அடித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...