×

புதுகையில் புதிதாக 219 பேருக்கு தொற்று


புதுக்கோட்டை, ஜன.25: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 219 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்றியம் வாரியாக தடுப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை துரிதமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று 219 பேருக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Pudukkottai ,
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு