திருவள்ளூர்: கடம்பத்தூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்(44). மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கணினியில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கூட்டுறவுத்துறையில் நிரந்தரமாக்கி பணி வழங்ககோரி கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி ரமேஷ் என்பவரை அணுகியுள்ளார். அப்போது அதிமுக நிர்வாகி ரமேஷ் ₹4 லட்சம் கொடுத்தால் கூட்டுறவுத்துறையில் நிரந்தரமாக்கி விடுவதாக கூறியுள்ளார். எனவே இதற்காக அட்வான்ஸ் தொகையாக ₹1 லட்சம் கொடுக்குமாறு ரமேஷ் கேட்டுள்ளார். இதனை நம்பி கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் ₹1 லட்சம் ஈஸ்வரன் கொடுத்துள்ளார்.