×

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கடலூர், ஜன. 25: கடலூர் அருகே உள்ள சின்னகங்கணாங்குப்பத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்