சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில், எஸ்ஐ பாண்டியன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 6 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்தன. விசாரணையில் அவர், அரக்கோணத்தை சேர்ந்த முன்னாள் சிறப்பு காவல் படை வீரர் செந்தில்குமார் (40) என்பதும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் நகை, பணத்தை திருடி வந்ததும் தெரிந்தது.