க.பரமத்தி அருகே மது பதுக்கி விற்றவர் கைது

க.பரமத்தி, ஜன.24: க.பரமத்தி அருகேயுள்ள கருஞ்செல்லிபாளையம் பகுதியில் மது பாட்டில் பதுக்கி விற்றவரை தென்னிலை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி அடுத்த தென்னிலை பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது க.பரமத்தி அடுத்த நஞ்சைகாளகுறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேந்திரன்(37) என்பவர் கருஞ்செல்லிபாளையம் பகுதியில் மது விற்பனைக்காக 5 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் தென்னிலை போலீசார் மகேந்திரன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Related Stories: