270 பேருக்கு கொரோனா

ஊட்டி,ஜன.22:நீலகிரி மாவட்டத்தில் நேற்று 270 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 216ஆக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.நேற்று 270 பேருக்கு  பாதிக்கப்பட்ட நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,216 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 35,207 பேர் சிகிச்சை முடிந்து வீடு. திரும்பியுள்ளனர். தற்போது 1,787 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக  உள்ளது.

Related Stories: