கல்லூரி முன்பு அனுமதியின்றி பாஜ கொடி கட்டியவர் மீது வழக்கு

பீளமேடு, ஜன.22: கோவைக்கு  நேற்று முன்தினம் பாஜ நிர்வாகிகள் சிலர் விமானம் மூலம் வந்தனர்.  அவர்களின் வருகையையொட்டி, கோவை-அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார்  கல்லூரி முன்பு பாஜ கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதற்கு  போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து  அனுமதியின்றி பாஜ   கட்சி கொடி கட்டியதாக அந்த கட்சி நிர்வாகி  மோகன்ராஜ் (48) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

Related Stories: