நாகர்கோவில், ஜன.22: கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேற்று தொடங்கி வைத்தார். குமரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் கள விளம்பர துறையின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி இணைந்து குமரி மாவட்டத்தில் கோரோனா நோய்த்தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகன பிரசாரம் கோட்டார் காவல் நிலையம் முன்பு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.