கொரோனா பரவல் அதிகரிப்பு 4 ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

நாகர்கோவில், ஜன.22: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பஸ், ரயில்கள் பொது போக்குவரத்து வழக்கம் போல் உள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ேதாறும் ஊரடங்கையொட்டி, போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மேலும் இரவு  நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது சில ரயில் சேவைகளை நிறுத்தவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் கோட்டத்தில் 4 ரயில்களின் சேவை தற்காலிகமாக இன்று (22ம்தேதி) முதல் 27ம் தேதி வரை 6 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

நாகர்கோவில் சந்திப்பு - கோட்டயம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16366), கொல்லம் சந்திப்பு  - திருவனந்தபுரம் சென்ட்ரல் (வண்டி எண் 06425), கோட்டயம் - கொல்லம் சந்திப்பு ( வண்டி எண் 06431), திருவனந்தபுரம் சென்ட்ரல் - நாகர்கோவில் சந்திப்பு (வண்டி எண் 06435) ஆகிய ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

Related Stories: