×

கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்

சேத்தியாத்தோப்பு, ஜன. 22: சேத்தியாத்தோப்பு பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் மற்றும் மளிகை கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.இந்நிலையில், புவனகிரி தாசில்தார் அன்பழகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி, கிராம உதவியாளர் அன்புதாஸ் உள்ளிட்ட குழுவிவினர் போலீசாருடன் சென்று  துணிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் தனியார் பேருந்துகள் ஆகியவற்றில் கொரோனா விதிமுறைகள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தனர். மேலும் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ,500 வீதம் அபராதம் விதித்தனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு