திட்டக்குடி, ஜன. 22: திட்டக்குடி தாசில்தாராக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து முஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த கார்த்திக், திட்டக்குடி தாசில்தாராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு திட்டக்குடி சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார் முருகன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலக
ஊழியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பண்ருட்டி: பண்ருட்டி தாசில்தாராக பணிபுரிந்த பிரகாஷ் பணி மாறுதல் காரணமாக கடலூர் சமூக நலத்திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டார்.