ஆடு மேய்ந்த தகராறு விவசாயிக்கு அடி,உதை

மேச்சேரி, ஜன.21:மேச்சேரி அடுத்த சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த விவசாயி மதியழகன்(57). இவருக்கு அழகாகவுண்டனூர் பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நேற்று முன்தினம் காலை, தனது நிலத்துக்கு சென்ற போது, அவரது நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த 5 பேர், தங்களின் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். இதுகுறித்து மதியழகன் அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மதியழகனை எட்டி உதைத்து தாக்கினர். இதில் காயமடைந்த மதியழகன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த சந்திரன், மதன், சாந்தி, குப்பாயி, மதன்ராஜ் ஆகிய 5பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories: