போலீஸ்காரரின் கையை கடித்த திருநங்கை

சேலம், ஜன.21: சேலம் ஜாகீர் சின்னஅம்மாப்பாளையத்தை சேர்ந்தவர் நபீஷா(32). திருநங்கையான இவர், சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் காசு வசூலித்து வந்ததாகவும், சட்டைப்படையில் கையை விட்டு பணத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் இர்பானிடம் கூறியுள்ளனர். அவர் திருநங்கையை கண்டித்தார். அப்போது போலீஸ்காரர் இர்பானின் கையை கடித்து காயப்படுத்தினார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மேலும் 2 போலீசார் அங்கு வந்து திருநங்கையை மடக்கினர். அப்போது பிளேடால் தனது கையை கிழித்துக்கொண்டார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று நபீஷாவுக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: