துணை காவல்நிலையம் அமைக்க கோரிக்கை

காளையார்கோவில், ஜன.21: காளையார்கோவில் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, சாலைவிபத்து போன்ற பல்வேறு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது. சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு காளையார்கோவில் போலீஸ் ஸ்டேசன் தலைமையிடமாக உள்ளதால் சம்பவ இடங்களுக்கு காவலர்கள் செல்வதற்கு முன்னால் குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை உள்ளது. சில வருடங்களுக்கு முன் காளையார்கோவில் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு மறவமங்களத்தில் துணை காவல் நிலையம் அமைக்கப்படும் என்று அப்போதைய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காளையார்கோவில் மற்றும் மறவமங்களத்திற்கு கூடுதல் காவலர்களுடன் கூடிய காவல் நிலையம் அமைத்து காவலர்களின் அலைச்சலை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: