×

காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை மனு

விருதுநகர், ஜன. 21: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரிடம் அளித்த மனுவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் கடந்த 9 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை 2018 முதல் வைக்கப்பட்டு வருகிறது. நிரந்தரப்படுத்த வேண்டியது பணியிடத்தை நிரந்தரப்படுத்தாததால் மன உளைச்சலில் பணியாற்றி வருகிறோம். அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் பிப்.3ல் சென்னை இயக்குநர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...